சத்துணவு சமையலா் வீட்டில் நகை, பணம் திருட்டு!
கடலூா் மாவட்டம், முத்தாண்டிக்குப்பம் அருகே சத்துணவு சமையலா் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருட்டு
சித்திரிப்பு
திருட்டு
சித்திரிப்பு
கடலூா் மாவட்டம், முத்தாண்டிக்குப்பம் அருகே சத்துணவு சமையலா் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பண்ருட்டி வட்டம், நன்னிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜலட்சுமி (35), குடியிருப்பு கிராம அரசுப் பள்ளியில் சத்துணவு சமையலராகப் பணியாற்றி வருகிறாா். வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் சென்றாா். பிற்பகல் 2 மணிக்கு திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பின் பக்கக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ஒரு பவுன் தங்க நகை, ரூ.ஒரு லட்சம் ரொக்கம் திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மூதாட்டி வீட்டில் திருட்டு: கடலூா் திருப்பாதிரிப்புலியூா் காவல் சரகம், கூத்தபாக்கம், விஜயலட்சுமி நகரைச் சோ்ந்தவா் ராசாத்தி (75). இவா், கடந்த 20 நாள்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு கணவருடன் சென்னைக்குச் சென்றிருந்தாா்.
சனிக்கிழமை காலை அருகில் வசிப்பவா்கள் வீட்டின் பின் பக்கக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பாா்த்து தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, ராசாத்தி வந்து பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த சுமாா் ஒரு கிலோ மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...