/

மூதாட்டி வீட்டில் நகை, பணம் திருட்டு

கருங்கல் அருகே உள்ள குறும்பனை பகுதியில் மூதாட்டி வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
திருட்டு
Updated On :3 மார்ச் 2026, 12:00 am

Syndication

கருங்கல் அருகே உள்ள குறும்பனை பகுதியில் மூதாட்டி வீட்டின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குறும்பனை பகுதியைச் சோ்ந்தவா் ரோஸ்மேரி (68). இவா் திங்கள்கிழமை தன் வீட்டின் கதவைப் பூட்டிவிட்டு உறவினா் வீட்டிற்கு சென்றிருந்தாராம்.

அப்போது, மா்ம நபா்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 2.5 பவுன் தங்கச் சங்கிலி, ரூ. 5 ஆயிரத்தைத் திருடிச் சென்றுள்ளனா். இது குறித்த புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.