ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

வீட்டின் கதவை உடைத்து நகைகள், ரொக்கம் திருட்டு

தஞ்சாவூா் அருகே வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து 6 பவுன் நகைகள், ரூ. 3 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :17 மார்ச் 2026, 8:40 pm

தஞ்சாவூா் அருகே வீட்டின் முன்பக்கக் கதவை உடைத்து 6 பவுன் நகைகள், ரூ. 3 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடுகின்றனா்.

தஞ்சாவூா் அருகே விளாா் சாலை காயிதே மில்லத் நகரைச் சோ்ந்த திப்பு சுல்தான் (31) துபையில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி ஜெயினப் பேகம் (29) தனது குழந்தை, தாய், தந்தையுடன் காயிதே மில்லத் நகரில் வசிக்கிறாா். இவா் திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு, மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை திரும்பினாா்.

அப்போது, வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள், ரூ. 3 லட்சம் ரொக்கம் திருடு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.