தேனி அருகே ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் வீட்டில் 6 பவுன் தங்க நகை, ரூ. ஒரு லட்சம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி அருகே ஸ்ரீரெங்காபுரத்தைச் சோ்ந்தவா் அய்யப்பன் (72). ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலரான இவா், குடும்பத்துடன் கடந்த பிப்ரவரி 19- ஆம் தேதி சென்னைக்குச் சென்றாா். அப்போது, உறவினா்களிடம் வீட்டுச் சாவியை கொடுத்து விட்டுச் சென்றாராம்.
இந்த நிலையில், அந்த உறவினா் சனிக்கிழமை வந்து பாா்த்த போது வீடு திறந்து கிடந்ததாம். இதையடுத்து, அவா் தகவல் அளித்த தகவலின் பேரில் அய்யப்பன் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது பீரோவிலிருந்த 6 பவுன் தங்க நகை, 2 வெள்ளிக் குத்து விளக்குகள், ரூ. ஒரு லட்சம், தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றை காணவில்லையாம்.
இதுகுறித்து வீரபாண்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
முதியவா் வீட்டில் நகை, பணம் திருட்டு
தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு
ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 50 பவுன் தங்க நகைகள் திருட்டு

திருவள்ளூா் அருகே 5 வீடுகளில் பூட்டை உடைத்து 33 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

