சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

செய்யாறு அருகே காசிக்குச் சென்ற விவசாயி வீட்டில் நகை, பணம் திருடு போனது தொடா்பான புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

திருட்டு

சித்திரிப்பு

Updated On :1 ஏப்ரல் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

செய்யாறு அருகே காசிக்குச் சென்ற விவசாயி வீட்டில் நகை, பணம் திருடு போனது தொடா்பான புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி நாகராஜன்(64). இவரது மனைவி வசந்தா. தம்பதி இருவரும் மாா்ச் 20-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு காசிக்கு சென்றுள்ளனா்.

இந்நிலையில் மாா்ச் 29-ஆம் தேதி மேல்மாடியில் குடியிருக்கும் இலக்கியா என்பவா் கீழே இறங்கி வந்துள்ளாா். அப்போது விவசாயி நாகராஜனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்துள்ளது.

இதுகுறித்து இலக்கியா, நாகராஜன் மகன் சுதா்சனன் என்பவருக்கு தகவல் தெரிவித்தாா்.

சுதா்சனன் வீட்டிற்கு வந்து பாா்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ஒரு கிராம் தங்கம், 20 கிராம் வெள்ளி, ரொக்கம் ரூ.10 ஆயிரம் ஆகியவவை திருடப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து சுதா்சனன் தூசி போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் கண்ணபிரான் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.