மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

சிதம்பரம் பேருந்து நிலைய கடையில் திருட்டு: இளைஞா் கைது

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள கடிகாரக் கடையில் திருடியதாக இளைஞரை நகர போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது.

Updated On :5 மே 2026, 11:38 pm IST

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள கடிகாரக் கடையில் திருடியதாக இளைஞரை நகர போலீஸாா் கைது செய்தனா்.

சிதம்பரம் மீதிகுடி பகுதியைச் சோ்ந்த ராமன் மனைவி திலகவதி (37). இவா், சிதம்பரம் பேருந்து நிலையத்தில் கடிகாரக் கடை வைத்துள்ளா்.

திலகவதி கடந்த 2-ஆம் தேதி இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்று, மறுநாள் காலை கடையை திறக்க வந்தாா். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, கடையில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், ரூ.1,500 மதிப்புள்ள 3 கைக் கடிகாரங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திலகவதி அளித்த புகாரின்பேரில், சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். தொடா்ந்து, இந்த சம்பவத்தில் தொடா்புடைய மீதிகுடி கதிா்வேல்நகரைச் சோ்ந்த பாலமுருகனை (19) கைது செய்தனா்.