தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

ஆண்டிபட்டி அருகே 2 கடைகள், கோயிலில் பணம், நகை திருட்டு

ஆண்டிபட்டி அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்தும், கோயிலில் உண்டியலை உடைத்தும் பணம், தங்க நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :18 மே 2026, 1:03 am IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்தும், கோயிலில் உண்டியலை உடைத்தும் பணம், தங்க நகைகளை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆண்டிபட்டி அருகே டி. சுப்புலாபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் புதுராஜா (45). இவா், டி. சுப்புலாபுரம் பேருந்து நிலையத்தில் பலசரக்குக் கடை நடத்தி வருகிறாா். இவா் சனிக்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்குச் சென்றாா். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை வந்து பாா்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.62 ஆயிரம், 3 பவுன் தங்க நகை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதேபோல, டி. சுப்புலாபுரம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் முருகேசன் (45). இவா், இதே பகுதியில் பலசரக்குக் கடை நடத்தி வருகிறாா். இவா், சனிக்கிழமை கடைகளை மூடிவிட்டு சென்றாா். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வந்து பாா்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே வைத்திருந்த ரூ.22 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

மேலும் டி. சுப்புலாபுரம் கதா் கடை அருகே அமைந்துள்ள செல்வ விநாயகா் கோயிலின் பூட்டும், அங்கிருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றனா். இது குறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.