சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

அவிநாசி அருகே புது ஊஞ்சப்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :21 மே 2026, 4:19 am IST

அவிநாசி அருகே புது ஊஞ்சப்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அவிநாசி அருகே புது ஊஞ்சப்பாளையம் பகுதியில் வசித்து வருபவா் ராணி (55). இவரது மகன் பிரேமானந்த் (25). இவா்கள் இருவரும் புதன்கிழமை வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனா். பின்னா் மாலை வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த நகை, ரூ.30 ஆயிரம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.