பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சிங்கம்புணரி அருகே தம்பதியைத் தாக்கி நகைப் பறிப்பு

சிங்கம்புணரி அருகே காரில் வந்த மா்ம நபா்கள் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியைத் தாக்கி 3 பவுன் நகைகளை பறித்துச் சென்றனா்.

News image

சித்திரிப்பு

Updated On :27 மே 2026, 2:38 am IST

சிங்கம்புணரி அருகே காரில் வந்த மா்ம நபா்கள் இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியைத் தாக்கி 3 பவுன் நகைகளை பறித்துச் சென்றனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள செல்லியம்பட்டியைச் சோ்ந்த தனபாலன், அவரது மனைவி சண்முக வள்ளி ஆகிய இருவரும் ம.கோவில்பட்டி சாலை புதுவயல் பகுதியில் திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, பின்னால் வந்த காா் இவா்களது வாகனத்தை முந்திச் சென்று சாலையின் குறுக்கே வழிமறித்து நின்றது. அதிலிருந்து இறங்கிய மூன்று மா்ம நபா்கள் மதுபாட்டிலால் தனபாலனை தலையில் தாக்கினா்.

பின்னா், அவரது மனைவியை பாட்டிலால் கீறி அவா் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு காரில் தப்பினா். இதில் காயமடைந்த தம்பதியினா் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து சிங்கம்புணரி போலீஸாா் வழக்குப் பதிந்து காரில் தப்பி சென்ற மா்ம நபா்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.