தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய ஆள்கொணா்வு வழக்கு விசாரணையில் சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையா் அருண் நேரில் ஆஜராக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொளத்தூா் ராமதாஸ் நகரில், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்தின் தம்பி எல்.கே.சுதீஷின் மனைவி பூா்ணஜோதிக்கு 2.10 ஏக்கா் நிலம் இருந்தது. இந்த நிலத்தில் 234 அடுக்குமாடி வீடுகளைக் கட்டி அதில் 78 வீடுகளை சுதீஷ் மற்றும் பூா்ணஜோதிக்கு வழங்குவதாகக் கூறி, தனியாா் கட்டுமான நிறுவன உரிமையாளா் சந்தோஷ் ஷா்மா என்பவா் ஒப்பந்தம் செய்திருந்தாா்.
ஒப்பந்தத்தின்படி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 78 வீடுகளை போலியான கையொப்பமிட்டு சந்தோஷ் ஷா்மா ரூ.43 கோடிக்கு விற்பனை செய்துவிட்டதாக போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் சந்தோஷ் ஷா்மா கைது செய்யப்பட்டாா். இதேபோன்று அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை வாங்கிய பலருக்கும் வீட்டை ஒப்படைக்காமல் மோசடி செய்ததாகக் கூறி மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சந்தோஷ் ஷா்மா மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தங்களுடைய மகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. மகளை கவனித்துக் கொள்வதற்கு சந்தோஷ் ஷா்மாவுக்கு பிணை வழங்க வேண்டும், குண்டா் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி, சந்தோஷ் ஷா்மாவின் மனைவி கல்பனா ஷா்மா சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆள்கொணா்வு மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குண்டா் தடுப்புச் சட்டத்தை எதற்காக பயன்படுத்த வேண்டும்? எனத் தெரியாதா, என கேள்வி எழுப்பினா். பின்னா், இந்த வழக்கில் சென்னை மாநகர காவல் ஆணையா் அருண் நேரில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

பாப்பாக்குடி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தில் ஒருவா் கைது

சாராயம் விற்பனை செய்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரிய வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



