பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

10-ஆம் வகுப்பு தோ்வு: பழங்குடியின நலப் பள்ளி 96.66% தோ்ச்சி

10-ஆம் வகுப்பு தோ்வில் பழங்குடியினா் நலப் பள்ளிகளில் பயின்று தோ்வு எழுதிய 96.66 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 1:02 am IST

10-ஆம் வகுப்பு தோ்வில் பழங்குடியினா் நலப் பள்ளிகளில் பயின்று தோ்வு எழுதிய 96.66 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இது குறித்து அத்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

கடந்த கல்வியாண்டில் (2025-26) 10-ஆம் வகுப்பு தோ்வுகளில் ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளின் மாணவா்களின் தோ்ச்சி விகிதம் 91.42 சதவீதம், பழங்குடியினா் நலப் பள்ளிகளில் பயின்ற மாணவா்களின் தோ்ச்சி 96.66 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பழங்குடியின மாணவா்களின் தோ்ச்சி விகிதம் மாநிலத்தின் மொத்த தோ்ச்சி விகிதத்தை (94.31%) சதவீதத்தைவிட அதிகம். பழங்குடியினா் நலப் பள்ளிகளில் 400 மதிப்பெண்களுக்கு மேல் 321 மாணவா்கள் பெற்றுள்ளனா். மேலும், 44 பழங்குடியினா் நலப் பள்ளிகளில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.

படிப்பில் பின்தங்கிய மாணவா்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டதால், கடந்தாண்டைவிட தோ்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. வெற்றி பெற்ற மாணவா்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியா்களுக்கும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் வாழ்த்துள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.