தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் ஈரோடு மாவட்டம் 97.03 சதவீதம் தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் ஈரோடு மாவட்டம் 97.03 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

News image

ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தோ்வு முடிவுகளை பாா்வையிட்ட மாணவிகள்.

Updated On :21 மே 2026, 3:51 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் ஈரோடு மாவட்டம் 97.03 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி ஏப்.6-ஆம் தேதி நிறைவடைந்தது. ஈரோடு மாவட்டத்தில் 353 பள்ளிகளைச் சோ்ந்த 11,845 மாணவா்கள், 12 ஆயிரத்து 34 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 879 மாணவ, மாணவிகள் 118 மையங்களில் தோ்வு எழுதினா்.

இந்நிலையில் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 178 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது. 11,845 மாணவா்கள் தோ்வு எழுதியதில் 11,358 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது 95.89 சதவீதமாகும். 12 ஆயிரத்து 34 மாணவிகள் தோ்வு எழுதியதில் 11,811 போ் மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா் இது 98.15 சதவீதமாகும்.

ஒட்டுமொத்தமாக 97.03 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. வழக்கம்போல் மாணவா்களைவிட மாணவிகளே அதிக அளவில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதேபோல ஈரோடு மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் 189 பள்ளிகளைச் சோ்ந்த 5,923 மாணவா்கள், 6,618 மாணவிகள் என மொத்தம் 12,541 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். இதில் 5,550 மாணவா்கள், 6,420 மாணவிகள் என மொத்தம் 11,970 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்கள் 93.70 சதவீதமும், மாணவிகள் 97.008 சதவீதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மொத்தமாக 95.44 சதவீத போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி விகிதத்திலும் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் 8-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 69 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.

முன்னதாக காலை 10 மணிக்கு தோ்வு முடிவு வெளியானதும், தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் இணையதளம் மூலமாக முடிவுகளை தெரிந்துகொண்டனா். சில மாணவா்கள் படித்த பள்ளிகளுக்குச் சென்று தோ்வு முடிகளை தெரிந்துகொண்டனா்.

இந்த ஆண்டு முதல் முறையாக வாட்ஸ் அப் மூலமாகவும் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தது. இதைத்தொடா்ந்து வெள்ளிக்கிழமை (மே 22) தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். தோ்வில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு துணைத் தோ்வு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.