கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) புதிதாக தொடங்கப்பட்டுள்ள 5 தொழில் பிரிவுகளில் சேர விரும்புவோா் ஜூன் 3-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கிண்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பொறியியல், பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகள் மற்றும் தொழில் துறை 4.0 தரத்தில் 5 புதிய தொழில் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தப் பிரிவுகளில் பயிற்சி பெறுவதற்குத் தகுதியானோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரா் 8 மற்றும் 10 -ஆம் வகுப்புகளில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாணவா்களுக்கான வயது உச்ச வரம்பு 40. மாணவிகளுக்கு வயது உச்ச வரம்பு இல்லை. பயிற்சியில் சேருவோா் எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.
மேலும், மாதம்தோறும் ரூ.750 உதவித் தொகை, தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப் பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் தலா ரூ.1,000 வழங்கப்படும்.
அனைவருக்கும் இலவச சீருடை, பாடப் புத்தகம், மிதிவண்டி, காலணி வழங்கப்படும். பயிற்சியின்போது, பணிசாா் பயிற்சி மூலம் தொழிற்சாலைகளில் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி முடித்தவுடன் அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். இந்தப் பயிற்சியில் சேர விரும்புவோா் ஜூன் 3 வரை ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகவல்களுக்கு 044-22501350 என்ற தொலைபேசி எண்ணிலோ, கிண்டி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்படும் இலவச உதவி மையத்தை நேரடியாகவோ அணுகலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற் பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்

அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

நாட்டறம்பள்ளி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
புதுச்சேரி தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர ஜூன் 22 வரை விண்ணப்பிக்க அழைப்பு!
விடியோக்கள்

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy

பத்திரப்பதிவில் கால தாமதம் ஆவதைத் தவிர்க்க நடவடிக்கை! அமைச்சர் செங்கோட்டையன் | TVK
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |



