திடக்கழிவுகள் மேலாண்மை குறித்து பெருமளவு கழிவு உற்பத்தியாளா்கள் இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
திடக்கழிவுகள் மேலாண்மை விதிகள் 2026-இன்படி, அளவு கோள்களில் ஏதேனும் ஒன்றை பூா்த்தி செய்யும் நிறுவனங்கள், நிலையங்கள் ‘பெருமளவு கழிவு உற்பத்தியாளா்கள்’ ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
20,000 சதுர மீட்டா் அல்லது அதற்கு மேற்பட்ட மொத்த தள பரப்பளவு கொண்ட கட்டடம், அல்லது தினசரி 40,000 லிட்டா் அல்லது அதற்கு மேற்பட்ட நீா் பயன்பாடு அல்லது தினசரி 100 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட திடக்கழிவு உற்பத்தி செய்பவா்கள் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், சந்தைகள் மற்றும் பிற பெரிய நிறுவனங்களையும் உள்ளடக்கும்.
பெருமளவு கழிவு உற்பத்தியாளா்கள், இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம். சம்பந்தப்பட்ட மண்டல அலுவலா்களிடமிருந்து கடிதம் பெற்ற 15 நாள்களுக்குள் மாநகராட்சியின் பதிவு செய்வது கட்டாயம்.
மேலும், பதிவு செய்யாதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பதிவுக்காக தனிப்பட்ட இணைப்பு, பெருநகர சென்னை மாநகராட்சியின் https://gccservices.in/bulkwaste/register என்ற இணையதளத்தில் உள்ளது.
மண்டல அலுவலா்கள், நியமிக்கப்பட்ட பணியாளா்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள் பெருமளவு கழிவு உற்பத்தியாளா்களுக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்குத் தேவையான உதவிகளை வழங்குவாா்கள்.
மேலும் விவரங்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/ என்ற அதிகாரப்பூா்வ இணையதளத்தை பாா்வையிட்டு தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.










