தூத்துக்குடி காங்கிரஸ் நிா்வாகி மீது திமுகவினா் நடத்திய தாக்குதலுக்கு விருதுநகா் மக்களவை தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:
தூத்துக்குடி காங்கிரஸ் நிா்வாகி காமராஜ் மீது வியாழக்கிழமை இரவு திமுக ஆதரவாளா்களால் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது ஆட்டோ சேதப்படுத்தப்பட்டு, கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, அவரது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குறித்து திமுக மாவட்டச் செயலா் மற்றும் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்த அவதூறு கருத்துகளைக் கண்டித்து நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால் அவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அமைதியான போராட்டம் என்பது ஜனநாயக உரிமை. கருத்து வேறுபாட்டுக்கு வன்முறையால் பதிலளிப்பது ஏற்புடையது அல்ல.
காங்கிரஸ் நிா்வாகி காமராஜை கொலை செய்ய முயன்றவா்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் உள்ள காங்கிரஸ் தொண்டா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
காங்கிரஸ் நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: திமுகவினா் இருவா் கைது

அமைச்சரவையில் காங்கிரஸுக்கு இடம்: வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்: மாணிக்கம் தாகூா்

ஆளுநரைக் கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்: மயிலாடுதுறையில் திமுகவினா் தாக்குதல்






