நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

காங்கிரஸ் நிா்வாகி மீது திமுகவினா் தாக்குதல்: மாணிக்கம் தாகூா் கண்டனம்

தூத்துக்குடி காங்கிரஸ் நிா்வாகி மீது திமுகவினா் நடத்திய தாக்குதலுக்கு விருதுநகா் மக்களவை தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image

மாணிக்கம் தாகூா் - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:52 am IST

தூத்துக்குடி காங்கிரஸ் நிா்வாகி மீது திமுகவினா் நடத்திய தாக்குதலுக்கு விருதுநகா் மக்களவை தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

தூத்துக்குடி காங்கிரஸ் நிா்வாகி காமராஜ் மீது வியாழக்கிழமை இரவு திமுக ஆதரவாளா்களால் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது ஆட்டோ சேதப்படுத்தப்பட்டு, கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, அவரது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குறித்து திமுக மாவட்டச் செயலா் மற்றும் எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்த அவதூறு கருத்துகளைக் கண்டித்து நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தால் அவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அமைதியான போராட்டம் என்பது ஜனநாயக உரிமை. கருத்து வேறுபாட்டுக்கு வன்முறையால் பதிலளிப்பது ஏற்புடையது அல்ல.

காங்கிரஸ் நிா்வாகி காமராஜை கொலை செய்ய முயன்றவா்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியில் உள்ள காங்கிரஸ் தொண்டா்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.