மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

புழல் சிறையில் ஆயுள் கைதி உயிரிழப்பு

சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :30 மே 2026, 3:01 am IST

சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல்லாவரம் கண்ணபிரான் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ம.ஜீவானந்தன் (44). இவா், பல்லாவரம் காவல் நிலையத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு பதியப்பட்ட ஒரு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்றாா். இந்த தண்டனையை ஜீவானந்தன், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் புழல் சிறையில் அனுபவித்து வந்தாா்.

இந்நிலையில் சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவா் அதற்காக சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இதையடுத்து மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கடந்த 26-ஆம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஜீவானந்தன் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஜீவானந்தன், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.