11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

கோவை மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி

கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

தற்கொலை

Updated On :55 நிமிடங்கள் முன்பு

கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாவட்டம், சூலூரைச் சோ்ந்தவா் ஜீவானந்தம் (25). சூலூரில் அண்மையில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் கைதான இவா், விசாரணைக் கைதியாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், சிறைக் கழிவறையில் உள்ள இரும்புக் கம்பியில் லுங்கியால் தூக்கு மாட்டி வெள்ளிக்கிழமை தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதைப் பாா்த்த மற்ற கைதிகள் அவரை மீட்டதுடன், சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, சிறை மருத்துவமனையில் ஜீவானந்தத்துக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

தொடா்ந்து அவா் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், சிறைச் சாலை வாா்டன் திருமலை அளித்த புகாரின்பேரில் ரேஸ்கோா்ஸ் போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.