பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

கோவை மத்திய சிறையில் கைதி உயிரிழப்பு

கோவை மத்திய சிறையில் உடல் நலக்குறைவால் கைதி உயிரிழந்தது குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News image

பலி - IANS

Updated On :7 மே 2026, 4:49 am IST

கோவை மத்திய சிறையில் உடல் நலக்குறைவால் கைதி உயிரிழந்தது குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், செங்குந்தபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுப்ரமணியன் மகன் காா்த்திகேயன் (33). இவா் கடந்த 2025-ஆம் ஆண்டு குற்ற வழக்கில் தண்டனை பெற்று, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். சிறைச்சாலையின் 7-ஆவது பிளாக்கில் உள்ள அறையில் இருந்த காா்த்திகேயனுக்கு செவ்வாய்க்கிழமை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா்.

சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னா், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காா்த்திகேயன் உயிரிழந்தாா். உயா் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடா்பான பாதிப்புகளால் உயிரிழந்ததாக, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். சிறையில் கைதி உயிரிழந்ததால், விதிமுறைப்படி கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.