சென்னை யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் வெ.வசந்தகுமாா் (26). இவரை யானைக்கவுனி காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு ஒன்றில் கடந்த 4-ஆம் தேதி கைது செய்து, புழலில் உள்ள விசாரணைக் கைதிகள் சிறையில் அடைத்தனா்.
ஏற்கெனவே அதிக போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் கொண்ட வசந்தகுமாா், உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில், வசந்தகுமாருக்கு புதன்கிழமை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து சிறைத் துறை அதிகாரிகள், வசந்தகுமாரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், வசந்தகுமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது தொடா்பாக புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசராணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சிறையில் கைதி மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

உடல்நலக் குறைவால் மத்திய சிறைக் கைதி உயிரிழப்பு

புழல் சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


