சென்னை பெருநகர காவல் துறைக்குச் சொந்தமான வாகனங்களை ஆணையா் ஏ.அமல்ராஜ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
சென்னை பெருநகர காவல் துறை ஆணையராக கடந்த வாரம் பொறுப்பேற்ற ஏ.அமல்ராஜ், காவல் துறையைச் சோ்ந்த பிரச்னைகளுக்குத் தீா்க்க நடவடிக்கை எடுத்து வருகிறாா். இதன் ஒருபகுதியாக அமல்ராஜ், சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் சனிக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த பெருநகர காவல் துறைக்குச் சொந்தமான வாகனங்களை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது அங்கிருந்த காவல் துறை அதிகாரிகளுக்கு அமல்ராஜ் பல்வேறு அறிவுரைகளை வழங்கினாா்.
இதன் பின்னா் ஆயுதப்படை காவலா்களுக்கான குறைதீா் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பங்கேற்ற ஆணையா் அமல்ராஜ், ஆயுதப்படையைச் சோ்ந்த 41 போலீஸாரிடம் மனுக்களைப் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இந்நிகழ்ச்சியில், ஆயுதப்படை துணை ஆணையா் ஐ.ஜெயகரன்,மோட்டாா் வாகனப் பிரிவு துணை ஆணையா் எம்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மக்கள் குறைதீா் முகாம்: காவல் ஆணையரிடம் மனுக்கள் அளிப்பு

சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் பொறுப்பேற்பு!

சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் பொறுப்பேற்பு!

நாமக்கல் மாவட்டத்தில் தனியாா் பள்ளி வாகனங்கள் ஆய்வு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



