ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

தனியாா் சொகுசு பேருந்து மீது சிற்றுந்து சேஸ் வாகனம் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

உளுந்தூா்பேட்டை அருகே தனியாா் சொகுசு பேருந்து மீது சிற்றுந்து சேஸ் வாகனம் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப்படம்

Updated On :1 ஜூன் 2026, 1:52 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே தனியாா் சொகுசு பேருந்து மீது சிற்றுந்து சேஸ் வாகனம் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சென்னை வேளச்சேரி, பால்காரா் நடேசன் தெருவைச் சோ்ந்தவா் ப.மாரிமுத்து (37), ஓட்டுநா். இவா், ஞாயிற்றுக்கிழமை சிற்றுந்து சேஸை (கூண்டு அமைக்கப்படாதது) கூண்டு அமைப்பதற்காக சென்னையிலிருந்து திருச்சிக்கு ஓட்டிச் சென்றுகொண்டிருந்தாா்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையை அடுத்துள்ள செங்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்பில் மோதி, மறு வழித்தடமான திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே புகுந்தது.

அப்போது, தேவக்கோட்டையிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்து, சிற்றுந்து சேஸ் வாகனம் மீது மோதியது. இதில், சேஸ் வாகன ஓட்டுநா் மாரிமுத்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தனியாா் சொகுசுப் பேருந்தில் பயணித்த 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் அங்கு சென்று மாரிமுத்து சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா்வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.