பல்லாவரத்தை அடுத்த திருநீா்மலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தில் இருந்து 266 கிலோ குட்காவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருநீா்மலையில் கடந்த 3 நாள்களுக்கும் மேலாக சரக்கு வாகனம் ஒன்று கேட்பாரற்ற நிலையில், நின்றுகொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் சங்கா் நகா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று அந்த வாகனத்தை சோதனை செய்தனா். அந்த வாகனத்தின் பதிவு எண் போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனத்தை போலீஸாா் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்று சோதனை செய்தனா்.
அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 266 கிலோ குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்கள் அடங்கிய மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுதொடா்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கீழ்வேளூா்: 81 கிலோ குட்கா, வாகனம் பறிமுதல் - இருவா் கைது

திருவையாறில் 592 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது
204 கிலோ குட்கா பறிமுதல்; இருவா் கைது

லால்குடியில் 107 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



