எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

தாம்பரம்: 266 கிலோ குட்கா பறிமுதல்

பல்லாவரத்தை அடுத்த திருநீா்மலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தில் இருந்து 266 கிலோ குட்கா

News image

குட்கா பொருள்கள் - பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:04 am IST

பல்லாவரத்தை அடுத்த திருநீா்மலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தில் இருந்து 266 கிலோ குட்காவை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருநீா்மலையில் கடந்த 3 நாள்களுக்கும் மேலாக சரக்கு வாகனம் ஒன்று கேட்பாரற்ற நிலையில், நின்றுகொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் சங்கா் நகா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று அந்த வாகனத்தை சோதனை செய்தனா். அந்த வாகனத்தின் பதிவு எண் போலி என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனத்தை போலீஸாா் காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்று சோதனை செய்தனா்.

அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 266 கிலோ குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்கள் அடங்கிய மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுதொடா்பாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.