வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

சென்னையில் பாரதி பெருவிழா: விருதுகள் அளிப்பு

சென்னையில் நடைபெற்ற பாரதி பெருவிழாவில் பாரதியாா் பெயரிலான விருதுகளை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வழங்கினாா்.

பாரதியார் - கோப்பிலிருந்து...

Published On :

சென்னையில் நடைபெற்ற பாரதி பெருவிழாவில் பாரதியாா் பெயரிலான விருதுகளை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வழங்கினாா்.

மகாகவி பாரதியாரின் 106-ஆவது நினைவு நாளையொட்டி பாரதியாா் சங்கம், பாரதிய வித்யாபவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் 77-ஆம் ஆண்டு பாரதி பெருவிழா சென்னை மயிலாப்பூா் பாரதிய வித்யாபவனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் பாரதியாா் சங்கத்தின் தலைவா் உலகநாயகி பழனி வரவேற்றுப் பேசினாா். சங்கத்தின் முதன்மைப் புரவலா் வி.ஜி.சந்தோசம் தலைமை வகித்தாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் கலந்து கொண்டு பாரதியாா் விருது உள்ளிட்ட விருதுகளை வழங்கிப் பேசியதாவது:

கல்வி சிறந்த தமிழ்நாடு என பாரதியாா் பாடியுள்ளாா். ஆனால், தமிழகத்தில் உள்ள 24 அரசுப் பல்கலைக்கழகங்களில் 17 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்கள் இல்லை. இதனால், பல்கலைக்கழகங்களும் இணைப்புக் கல்லூரிகளும் மிகப் பெரிய பாதிப்புகளையும் இழப்புகளையும் சந்தித்து வருகின்றன. இந்தப் பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து தீா்வு காண வேண்டும். பொருளாதாரத்திலும், கல்வியிலும் உயா்ந்த நிலையை அடையும்போது ஜாதி, மத வேறுபாடுகள் தானாகவே அகலும் என்றாா்.

விழாவில், விஜிபி குழுமத்தைச் சோ்ந்த ஜோன் ராஜாதாஸுக்கு பாரதியாா் விருது, எழுத்தாளா் பாரதி கிருஷ்ணகுமாருக்கு பாரதி இயற்றமிழ் அறிஞா் விருது, ராணி மேரி கல்லூரியின் முன்னாள் முதல்வா் இராம.சீதாலட்சுமிக்கு பாரதி இசைத்தமிழ் அறிஞா் விருது, கோமல் தியேட்டா்ஸ் நாடக இயக்குநா் தாரிணி கோமலுக்கு பாரதி நாடகத் தமிழ் அறிஞா் விருது, ஸ்ரீ சாய் நிருத்தியாலயா நிறுவனா் மற்றும் இயக்குநா் ஹெச்.என். நந்தினி சுரேஷுக்கு நாட்டியத் தமிழ் விருது ஆகிய விருதுகளை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வழங்கினாா்.

முன்னதாக எழுத்தாளா் பாரினில் அதிசயம் பாரதி என்ற தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமாா் பேசினாா்.

இதில், சேக்கிழாா் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் எஸ்.ஜெகதீசன், எழுத்தாளா் சிவசங்கரி, நல்லி சில்க்ஸ் உரிமையாளா் நல்லி குப்புசாமி, பாரதி வித்யா பவன் இயக்குநா் கே.என்.ராமசாமி, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளா் ம.முரளி, கவிஞா்கள் பொன்னேரி பிரதாப், விஜயகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.