இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

காவிரி: வழக்குரைஞர்கள் சாலை மறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :6 ஏப்ரல் 2018, 2:52 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தை (சிவில்) சேர்ந்த வழக்குரைஞர்கள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் தலைவர் செல்வமணி தலைமை வகித்தார். சங்கத்தின் செயலாளர் அர்ஜுனன், நிர்வாகிகள் வேல்முருகன், ராஜவேல், பெருமாள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் நடராஜ் வழக்குரைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மறியல் போராட்டத்தை கைவிட்டு வழக்குரைஞர்கள் கலைந்து சென்றனர். இதனால், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.