தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

மதுபானம் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து: 4 பேர் காயம்

டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து 4 பேர் காயமடைந்தனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST


டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து 4 பேர் காயமடைந்தனர்.
காஞ்சிபுரம், ஓரிக்கையிலிருந்து டாஸ்மாக் கடைகளுக்கு மது பாட்டில்கள் லாரி மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை மாலை வழக்கம் போல் காஞ்சிபுரத்தை அடுத்த வேடல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலையில் வேடல் அருகே சென்றபோது, லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பல ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் சேதமடைந்தன. லாரி ஓட்டுநர் உள்பட 4 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இதுதொடர்பாக, காஞ்சிபுரம் கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.