எதிர்பாராத அழிவுகளை கடந்த 2004ஆம் ஆண்டில் ஏற்படுத்திய சுனாமி, சர்வதேச சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தை சூறையாடிச் சென்றதை மறக்க முடியாது.
ராட்சத அலைகளின் ஆக்ரோஷ தாக்குதல் சுற்றுலா இடங்களை சின்னாபின்னமாக்கியதோடு, புதுப்பட்டினம் தேவாலயம், கல்பாக்கம், தேவனேரி, கொக்கிலமேடு, வெண்புருஷம்குப்பம், சூளேரிக்காட்டுக்குப்பம் நெம்மேலிகுப்பம், உய்யாளிக்குப்பம், கோவளம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளை முற்றிலும் சீர்குலைத்தது.
எண்ணற்ற உயிர்களை பலி வாங்கிய இந்த கோரச் சம்பவம் ஆண்டுதோறும் மாமல்லபுரம் நகர மக்களின் நினைவுகளில் வந்து சோகப் பெருமூச்சை ஏற்படுத்திச் செல்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









