மறைந்த இயற்கை வேளாண் ஆர்வலர் நம்மாழ்வாரின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வானரகம் நோக்கி சென்ற மிதிவண்டி பிரசாரக் குழுவினருக்கு மதுராந்தகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நம்மாழ்வாரின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இயற்கை வளங்களையும், மக்கள் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் நஞ்சில்லா வேளாண்மை, பனை மரம் வளர்ப்பு, பிளாஸ்டிக் புறக்கணிப்பு, மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்துதல், பன்னாட்டு விற்பனைப் பொருள்களை புறக்கணித்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பனை சதீஷ் தலைமையில் மக்கள் சந்திப்பு பிரசாரக் குழுவினர் மிதிவண்டிப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு மதுராந்தகத்தில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் துரை பிருதிவிராஜ், இந்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடப் பெருமாள், இயற்கை ஆர்வலர் கம்சலாபுரம் திருவேங்கிடம், ஓவியர் சினேகலதா உள்பட பலர் கலந்து கொண்டனர். மிதிவண்டி குழுவினர்களான மா.மீனாட்சி சுந்தரம், பிரசாந்த், விஷ்ணுப்ரியன், திருவேங்கிடம் உள்பட பலரும் கலந்து கொண்டனர். அதையடுத்து மதுராந்தகத்தில் இருந்து மிதிவண்டிக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை சோத்துப்பாக்கம், அச்சிறுப்பாக்கம் வழியாக பயணத்தைத் தொடர்ந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் சந்திப்பு உரிமைகள் பாதுகாப்புக் குழுவினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









