மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

நம்மாழ்வார் நினைவு நாள்: மிதிவண்டி பிரசார பயணம்

மறைந்த இயற்கை வேளாண் ஆர்வலர் நம்மாழ்வாரின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வானரகம் நோக்கி சென்ற

News image

மதுராந்தகத்தில் வரவேற்பு அளித்த மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் துரை பிருதிவிராஜ் (இடது).

Updated On :26 டிசம்பர் 2018, 3:13 am IST

மறைந்த இயற்கை வேளாண் ஆர்வலர் நம்மாழ்வாரின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வானரகம் நோக்கி சென்ற மிதிவண்டி பிரசாரக் குழுவினருக்கு மதுராந்தகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நம்மாழ்வாரின் 5ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இயற்கை வளங்களையும், மக்கள் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் நஞ்சில்லா வேளாண்மை, பனை மரம் வளர்ப்பு, பிளாஸ்டிக் புறக்கணிப்பு, மதுராந்தகம் ஏரியை ஆழப்படுத்துதல், பன்னாட்டு விற்பனைப் பொருள்களை புறக்கணித்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பனை சதீஷ் தலைமையில் மக்கள் சந்திப்பு பிரசாரக் குழுவினர் மிதிவண்டிப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு மதுராந்தகத்தில் சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் துரை பிருதிவிராஜ், இந்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடப் பெருமாள், இயற்கை ஆர்வலர் கம்சலாபுரம் திருவேங்கிடம், ஓவியர் சினேகலதா உள்பட பலர் கலந்து கொண்டனர். மிதிவண்டி குழுவினர்களான மா.மீனாட்சி சுந்தரம், பிரசாந்த், விஷ்ணுப்ரியன், திருவேங்கிடம் உள்பட பலரும் கலந்து கொண்டனர். அதையடுத்து மதுராந்தகத்தில் இருந்து மிதிவண்டிக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை சோத்துப்பாக்கம், அச்சிறுப்பாக்கம் வழியாக பயணத்தைத் தொடர்ந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மக்கள் சந்திப்பு உரிமைகள் பாதுகாப்புக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.