கடும் வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி நகராட்சி ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் பெருநகராட்சியில் வீட்டு வரி, சொத்துவரி, பாதாளச் சாக்கடை இணைப்பு வரி, குப்பை வரி, திடக்கழிவு கட்டணங்கள் உள்ளிட்டவற்றில் கடுமையாக உயர்த்தி, விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்தும், இந்த வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை திங்கள்கிழமை நடத்தினர்.
அதன்படி, நகரக்குழு நிர்வாகி பாண்டியன் தலைமையில், நகர, மாவட்டக்குழு நிர்வாகிகள் சீதாராமன், முத்துக்குமார், நேரு, சங்கர் உள்ளிட்டோர் முன்னிலையில் நகராட்சி ஆணையர் சர்தாரிடம் மனு அளித்தனர். முன்னதாக, நகராட்சி அலுவலகம் முன்பு அதிக வரிவிதிப்பை வாபஸ் பெறுமாறும், குப்பை வரி, திடக்கழிவுக் கட்டணத்தை கைவிடுமாறும் கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திரளான மார்க்சிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மாநகரில் குடிநீா் தட்டுப்பாடு, தெரு நாய்கள் தொல்லை: மாமன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் புகாா்
பெண் தலை துண்டித்துக் கொலை: கணவா் கைது

13.3.1976: குஜராத்தில் ராஷ்டிரபதி ஆட்சி

உலக சிறுநீரக தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

