எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கடும் வரிவிதிப்பை வாபஸ் பெற வலியுறுத்தி ஆணையரிடம் மனு

கடும் வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி நகராட்சி ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

News image
Updated On :9 ஜூலை 2018, 10:36 pm

DIN

கடும் வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி நகராட்சி ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் பெருநகராட்சியில் வீட்டு வரி, சொத்துவரி, பாதாளச் சாக்கடை இணைப்பு வரி, குப்பை வரி, திடக்கழிவு கட்டணங்கள் உள்ளிட்டவற்றில் கடுமையாக உயர்த்தி, விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்தும், இந்த வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை திங்கள்கிழமை நடத்தினர். 
அதன்படி, நகரக்குழு நிர்வாகி பாண்டியன் தலைமையில், நகர, மாவட்டக்குழு நிர்வாகிகள் சீதாராமன், முத்துக்குமார், நேரு, சங்கர் உள்ளிட்டோர் முன்னிலையில் நகராட்சி ஆணையர் சர்தாரிடம் மனு அளித்தனர். முன்னதாக, நகராட்சி அலுவலகம் முன்பு அதிக வரிவிதிப்பை வாபஸ் பெறுமாறும், குப்பை வரி, திடக்கழிவுக் கட்டணத்தை கைவிடுமாறும் கோரி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திரளான மார்க்சிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.