வீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுகோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புமேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

காவல் நிலையத்தில் நிகழ்ந்த மரணம் தொடர்பான வழக்கு: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் சூனாம்பேட்டில், போலீஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பான விசாரணையை

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

காஞ்சிபுரம் மாவட்டம் சூனாம்பேட்டில், போலீஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்புக்காக ஒத்திவைத்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சூனாம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் சிற்றரசு. இவர் அச்சிறுப்பாக்கம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். சிற்றரசுக்கும், ஆனந்தன் என்பவருக்கும் இடையே வீட்டுமனை தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த மே 1 -ஆம் தேதி விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிற்றரசு, அடுத்த நாள் மர்மமான முறையில் காவல் நிலையத்தில் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. 
இதையடுத்து அவரது மனைவி வெண்ணிலா, தனது கணவரின் மரணம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், பிரேத பரிசோதனையின்போது தங்கள் தரப்பு மருத்துவரை அனுமதிக்க கோரியும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வி.பார்த்திபன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்குரைஞர் எமிலியாஸ், 'பிரேத பரிசோதனையைக் கண்காணிக்க, சென்னை கீழ்ப்பாக்கம் தடய அறிவியல் துறை மருத்துவர் செல்வக்குமார், சென்னை மருத்துவக் கல்லூரி தடய அறிவியல் துறை இயக்குநர் பராசக்தி, ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் பாலசுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரேத பரிசோதனையை விடியோ பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக அரசு சார்பில் மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதால், அவரது குடும்பத்தினர் சார்பில் பரிந்துரை செய்யும் மருத்துவர் ஒருவர் உடனிருக்க அனுமதிக்க வேண்டிய தேவையில்லை என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். மேலும் வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து அவர்கள் உத்தரவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.