முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தீபாவளி சீட்டு நடத்தி ரூ 2 கோடி மோசடி: பணம் கட்டி ஏமாந்தவர்கள் போராட்டம்

மதுராந்தகம் நகரில் தீபாவளிச் சீட்டு நடத்தி தங்கநகை, சிலபொருட்களை வழங்குவதாக கூறி 100-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.2 கோடி வசூலித்துவிட்டு ஏமாற்றி

Updated On :6 நவம்பர் 2018, 2:45 am IST


மதுராந்தகம் நகரில் தீபாவளிச் சீட்டு நடத்தி தங்கநகை, சிலபொருட்களை வழங்குவதாக கூறி 100-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.2 கோடி வசூலித்துவிட்டு ஏமாற்றி மோசடி செய்த கும்பலின் வீட்டை சீட்டு கட்டியவர்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
மதுராந்தகம் செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர். அவரது மனைவி மலா, மகன் ஜெயகுமார். இவர்கள் 3 பேரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சீட்டு நடத்தினர். அதன்படி மாதந்தோறும் ரூ.500, ரூ.750 என பல வகையிலான மாதாந்திர சீட்டுகளை நடத்தி வந்தனர். அதற்காக தங்க நகை, பட்டாசு, இனிப்பு, வீட்டு மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை வழங்குவதாகக் கூறி பலரிடமும் பணம் வசூலித்து வந்தனர்.
மதுராந்தகம், சித்தாமூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல நூறு பேர் இந்த தீபாவளி சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் 12 மாத சீட்டுகள் முடிவடைந்தன. தீபாவளி கொண்டாடப்படும் நவம்பர் மாதத்தில் சீட்டு கட்டியவர்களுக்கு உரிய பொருள்களை வழங்க வேண்டும். ஆனால் சீட்டு நிதி வசூலித்த மூன்று பேரும் அந்தப் பொருள்களைத் தரவில்லை.
இந்நிலையில், 3 பேரும் வீட்டை பூட்டி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர். தகவலறிந்து சீட்டு கட்டி ஏமாந்தவர்கள் சங்கரின் வீட்டை ஞாயிர்றுக்கிழமை இரவு முற்றுகையிட்டனர். அவர்கள் அனைவரும் மதுராந்தகம் காவல் நிலையத்துக்கு சென்றனர். அப்போது, இது பற்றி முறையாக புகார் கொடுத்துவிட்டு செல்லுங்கள். அதன்படி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதி அளித்ததால், அனைவரும் கலைந்து சென்றனர். தீபாவளி சீட்டுக்காக சங்கர் குடும்பத்தினர் ஆயிரக்கணக்கானோரிடம் சுமார் ரூ.2 கோடி வசூல் செய்து மோசடி செய்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மதுராந்தகம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.