செரப்பனஞ்சேரி ஊராட்சியில் ரூ.8.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட செரப்பனஞ்சேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடத்தின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. குன்றத்தூர் ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜேஸ்வரி விழாவுக்குத் தலைமை வகித்து கட்டடத்தைத் திறந்து வைத்தார். இதில் முன்னாள் கல்வி குழுத் தலைவர் சண்முகசுந்தரம், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பெருமாள், ஏழுமலை, பஞ்சா, மணி, முருகன், வேலு, அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோடை வெய்யில்: பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? அமைச்சர் ராஜ்மோகன் பதில்!

பணவீக்க நாயகனின் அதிரடி தொடருகிறது.. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

கார்த்தி - 30 பூஜை!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


