கிராமக் கணக்கில் வராதோருக்கு ஆட்சியர் பா.பொன்னையா பட்டா வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள பொதுமக்கள் நல்லுறவு மையத்தில் குறைதீர் கூட்டம் ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ.5 லட்சத்து 80 ஆயிரத்து 20-க்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, திருக்கழுக்குன்றம் வட்டம், வள்ளிபுரம் கிராமத்தில் வசித்து வருவோர் தங்களது அரசு பட்டா நிலம் கிராமக் கணக்குகளில் வரவில்லை என அண்மையில் மனு அளித்திருந்தனர்.
அதன்பேரில், வேங்கடம்மாள், முத்தழகி, ராஜேந்திரன், ஜானகி ஆகியோருக்கு ஆட்சியர் பட்டா வழங்கினார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, தனித்துறை ஆட்சியர் சக்திவேல் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்வீடனில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

கேரளத்திலும் கால் பதிக்கும் தவெக! திருச்சூரில் மாவட்ட அளவிலான முதல் கூட்டம்!

ஃபகத் பாசில் புதிய படம் பூஜையுடன் துவங்கியது - புகைப்படங்கள்

கேரள காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைச்சர்கள் பட்டியல்! வி.டி. சதீசன் அறிவிப்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
