வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்க்கும் பணியை ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, புதியதாகத் தயாரிக்கப்பட்ட 10,170 எம்-3 வாக்குப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட்டுகள், சரிபார்க்கும் இயந்திரங்கள் ஆகியவை பெல் நிறுவனத்திலிருந்து கொண்டுவரப்பட்டு சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களின் சரிபார்ப்புப் பணியானது, ஆட்சியர் தலைமையில், பெல் நிறுவனப் பொறியாளர்களுடன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் முதல்நிலை சரிபார்க்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, தேர்தலுக்கு 60 நாள்களுக்கு முன்பு இரண்டாம் நிலை சரிபார்த்தல் பணியும், தேர்தலுக்கு முன் மூன்றாம் கட்ட சரிபார்த்தல் பணியும் நடைபெறவுள்ளன.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் ராஜு, நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன், வட்டாட்சியர் காஞ்சனா மாலா, தனி வட்டாட்சியர் வாசுதேவன், அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரக்ஞானந்தா - கீமர் மோதல் ‘டிரா’

ஆனைமங்கலம் செப்பேடுகளை தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் பாதுகாக்க வேண்டும்: மத்திய அமைச்சருக்கு தமிழக எம்பி கடிதம்

சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்

3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
