/

வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை ஆய்வுக் கூட்டம்

ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் வெள்ளத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்பான அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை

News image
Updated On :22 அக்டோபர் 2018, 9:45 pm


ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் வெள்ளத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்பான அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு வெள்ளத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகளைக் கண்காணிக்க உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையர் அமுதா தலைமையில் 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. இதுதவிர மாவட்டத்தில் வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் அடங்கிய 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் வெள்ளத் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) குணசேகரன் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வட்டத்தில் நடைபெற்று வரும் வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.