வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பொறியியல் கல்லூரியில் முதலாண்டு மாணவர் வரவேற்பு விழா

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் 35ஆவது ஆண்டு விழா திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 11:09 pm


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கும் 35ஆவது ஆண்டு விழா திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் கோ.ப.செந்தில்குமார் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் வா.ராமசாமி முன்னிலை வகித்தார். துணை முதல்வர் வே.நாகராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தனியார் தொலைக்காட்சி கலைநிகழ்ச்சி பங்கேற்பாளர் பழனி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 
கல்லூரி தொடங்கி 35-ஆவது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு இந்த கல்வி ஆண்டு முதல் அடிகளார் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது. சுமார் 30 மாணவ மாணவிகளுக்கு முழு கல்விக் கட்டண விலக்கு 4 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டது. 25 மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டது. இந்த வகையில் சுமார் ரூ.35 லட்சம் மதிப்பிலான உதவித் தொகையாகும். கல்லூரியின் அனைத்துத் துறை பேராசிரியர்களும், மாணவ மாணவிகளும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர். கல்லூரி முதலாண்டு ஒருங்கிணைப்பாளர் ராதா நன்றி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.