தனியார் அறக்கட்டளை சார்பாக ரூ. 40 லட்சத்தில் செரப்பனஞ்சேரி பெரிய ஏரி தூர்வாரும் பணியை ஸ்ரீபெரும்புதூர் சட்டப் பேரவை உறுப்பினர்
கே.பழனி திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட செரப்பனஞ்சேரி ஊராட்சியில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த ஏரியின் நீர்தான் செரப்பனஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரி நீரைப் பயன்படுத்தி இப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அபினவ தீர்த்தம் அறக்கட்டளை சார்பாக ரூ.40 லட்சம் மதிப்பில் இந்த ஏரியில் உள்ள கோரைப்புற்களை அகற்றி, தூர்வாரி கரையை பலப்படுத்தவும், கரைகளில் மரக்கன்றுகள் நடவும், ஏரியைச் சுற்றிலும் எல்லைக்கற்கள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஏரி தூர்வாரும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி செரப்பனஞ்சேரி ஏரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பழனி பங்கேற்று, தூர்வாரும் பணியைத் தொடங்கிவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமராவதி-குழப்பம் தீர்ந்தது!

பட்டதாரிகள் வேலை இல்லாமல் தவிக்கின்றனா்: ஏசி. சண்முகம்

தேசிய வருவாய் திறனறிவுத் தோ்வில் மன்னாா்குடி மாணவா்கள் 2 போ் தோ்வு

பிறவி மருந்தீசா் கோயில் கருப்பன் வீதியுலா
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

