அச்சிறுப்பாக்கத்தில் நிதி நிறுவன மோசடியை கண்டித்து பெண்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூரை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தின் கிளை அலுவலகம் அச்சிறுப்பாக்கத்தில் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தினர் அப்பகுதி மக்களிடம் மாதம் ரூ.500 வீதம் 60 மாதங்களுக்கு சீட்டுப் பணம் வசூலித்து வந்தனர். இதை நம்பிய கிராம மக்கள் முழுதொகையும் செலுத்தினர். ஆனால், சொன்னபடி நிறுவனத்தினர் ரூ.45 ஆயிரம் தராததுடன், கட்டிய பணத்தையும் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அச்சிறுப்பாக்கம் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்தபின்னர் பொதுமக்கள் கலைந்துசென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகர் அல்ல... முதல்வர் விஜய்! திமுக தலைவர்களின் பதிவுகளுக்கு கடும் விமர்சனங்கள்!

கருப்பு டிரைலர்!

முதல்வா் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து!

பேங்க் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் 19% உயர்வு!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
