கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

விவசாய கிணற்றில் தூர்வாரும்போது மண்சரிந்து இரண்டு கூலி தொழிலாளர்கள் பலி

விவசாய கிணற்றில் தூர்வாரும்போது மண்சரிந்து இரண்டு கூலி தொழிலாளர்கள் பலியானார்கள்.

News image
கோப்புப் படம்
Updated On :22 மே 2020, 1:11 pm

DIN

விவசாய கிணற்றில் தூர்வாரும்போது மண்சரிந்து இரண்டு கூலி தொழிலாளர்கள் பலியானார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள களத்தூர் கிராமத்தில் அருள் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் கடந்த மூன்று நாள்களாக பழைய கிணற்றை தூர்வாரும் பணி நடைபெற்றது. இதில் இன்று கிணற்றுக்குள் 5 பேரும் கிணற்றுக்கு மேல் பகுதியில் 7 பேரும் ஆக 12 பேர் வேலை செய்து வந்தனர்.

அப்போது திடீர் என கிணற்றில் விடுகரையில் மண்சரிவு ஏற்பட்டது. இந்த மண்சரிவில் சிக்கி இந்த கிராமத்தை சேர்ந்த (களத்தூர்) எழிலரசு வயசு 24, விஜி 23 ஆகிய இருவர் சம்பவ இடத்தில் பலியானார்கள். சரவணன் மற்றும் மணி ஆகிய இருவர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இருவரும் மருத்துமனையில் அனுமதிக்கபட்டு உள்ளனர்.

பிரேதத்தை கைப்பற்றி ஒரத்தி காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.