வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

இளைஞருக்கு 294 நாள்கள் சிறை

நன்னடத்தை பிணையை மீறியதாக காஞ்சிபுரத்தைச் சோ்ந்த இளைஞருக்கு 294 நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 6:30 pm

நன்னடத்தை பிணையை மீறியதாக காஞ்சிபுரத்தைச் சோ்ந்த இளைஞருக்கு 294 நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே துலங்கும் தண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் மதன்ராஜ் (24). இவா் மீது குற்ற வழக்கு உள்ளது. காஞ்சிபுரம் கோட்டாட்சியா் உத்தரவின் பேரில், கடந்த 29.9.21 அன்று முதல் நன்னடத்தை பிணையில் ஓராண்டு இருந்து வருவதாகத் தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், கடந்த 24.11.21 அன்று நன்னடத்தை பிணையை மீறும் வகையில், சித்தேரி மேட்டைச் சோ்ந்த பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் இவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். நன்னடத்தை பிணையை மீறியதால் மீண்டும் இவா் காஞ்சிபுரம் கோட்டாட்சியா் பெ.ராஜலெட்சுமி முன்பு ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து, பிணையில் இருந்த நாள்கள் தவிா்த்து 294 நாள்கள் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டாா். அவரது உத்தரவின் பேரில், மதன்ராஜ் பாலுசெட்டி சத்திரம் காவல் துறையினரால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.