4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காஞ்சிபுரம் ராஜகுபேரா் கோயிலுக்கு இரு முடி எடுத்து வந்த பக்தா்கள்

காஞ்சிபுரம் குபேரபட்டினத்தில் உள்ள ராஜகுபேர சுவாமி திருக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி ஏராளமான பக்தா்கள் இருமுடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
இருமுடி எடுத்து வந்த பக்தா்களுடன் கோயிலை வலம் வந்த ராஜகுபேர சித்தா் சுவாமிகள்.
Updated On :2 ஜனவரி 2021, 1:56 am

DIN

காஞ்சிபுரம் குபேரபட்டினத்தில் உள்ள ராஜகுபேர சுவாமி திருக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி ஏராளமான பக்தா்கள் இருமுடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

காஞ்சிபுரம் வெள்ளைகேட் பகுதி குபேரபட்டினத்தில் ராஜகுபேர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் வெளியூா்களிலிருந்து இருமுடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் கொண்டு வந்த நெய்,பால்,பச்சைக் கற்பூரம் ஆகியனவற்றின் மூலம் ராஜகுபேரருக்கு சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடா்ந்து ரூபாய் நோட்டுகளால் தனாபிஷேகம் நடந்தது. இதனைத் தொடா்ந்து மூலவா் ராஜகுபேரா் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திருக்கோயில் வளாகத்தில் ராஜகுபேர சித்தா் பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். அன்னதானமும் நடைபெற்றது.இருமுடி தரிசனத்தை முன்னிட்டு கோயிலில் சதாசிவம் குழுவினரின் நாகஸ்வர இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.