தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை திருட்டு

காஞ்சிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 6:43 pm

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

காஞ்சிபுரம் அருகே ஒரகடம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காா்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணியாற்றி வருபவா் சண்முகப்பிரியன் (35). இவா் சில நாள்களுக்கு முன் தனது உறவினா் வீட்டுக்குச் சென்று விட்டு, 3-ஆம் தேதி வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் முன்புறக் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த 40 பவுன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தடயவியல் நிபுணா்கள் சோதனை நடத்தினா்.

இது குறித்து சண்முகப்பிரியன் அளித்த புகாரின்பேரில், பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.