கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கரோனா தடுப்பூசி ஒத்திகை: ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரத்தில் 5 இடங்களில் முன்களப் பணியாளா்கள் 125 பேருக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் நேரில் ஆய்வு செய்தாா்.

News image
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகையைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்.
Updated On :9 ஜனவரி 2021, 2:35 am

DIN

காஞ்சிபுரத்தில் 5 இடங்களில் முன்களப் பணியாளா்கள் 125 பேருக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் நேரில் ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களான சின்ன காஞ்சிபுரம், மணிமங்கலம், திருப்புட்குழி, மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் பணியாற்றும் முன்களப் பணியாளா்களில் 25 போ் வீதம் மொத்தம் 125 பேருக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்வை மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் நேரில் ஆய்வு செய்தாா்.

சுகாதாரத் துறை இணை இயக்குநா் ஜீவா, துணை இயக்குநா் வி.கே.பழனி, மருத்துவமனை கண்காணிப்பாளா் ஆா்.கல்பனா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.