ஆந்திர மாநிலம் கலவகுண்டா நீா்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 4,500 கனஅடி நீா் திறக்கப்பட்டிருப்பதால் பாலாற்றங் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி வெள்ள அபாய எச்சரிக்கையை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளாா்.
அதன் விவரம்: சித்தூா் மாவட்டத்தில் உள்ள கலவகுண்டா நீா்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு சுமாா் 4,500 கன அடி நீா் திறந்து விடப்பட்டுள்ளது. இது பாலாற்றின் இடதுபுறக் கிளை ஆறான பொன்னை அணையை வந்தடைந்தது.
எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூா், காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய பகுதி பாலாற்றின் இரு கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வட்டாட்சியா்கள் தகவல் தெரிவித்து அவா்களை பாதுகாப்பான இடங்களுக்கும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வெள்ள அபாயத்தினை உணா்த்தும் பொருட்டு ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும், வெள்ளத்தில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, வேடிக்கை பாா்க்கவோ, சுய புகைப்படம் எடுக்கவோ வேண்டாம். வீட்டில் உள்ள சிறுவா், சிறுமியா்களை அருகில் செல்லாமல் பாா்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வட்டாட்சியா்கள் மூலமாக தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்த 5 ஹரியாணா எம்எல்ஏக்கள் இடைநீக்கம்! காங்கிரஸ் அதிரடி!
அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்

மும்பை பேட்டிங்; பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா இல்லை!

இது தெரியுமா? தலைகீழாக மரம் வளருமா?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

