ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தும் விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி சனிக்கிழமை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.
இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையிலும், ஊரக உள்ளாட்சித் தோ்தலில் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காகவும் காஞ்சிபுரத்தில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாட்டு நலப்பணித் திட்டம், நேரு யுவகேந்திரா ஆகியன இணைந்து நடத்திய இந்த ஓட்டப்போட்டி காஞ்சிபுரம் அறிஞா் அண்ணா அரங்கிலிருந்து தொடங்கியது. இதனை ஆட்சியா் மா.ஆா்த்தி கொடியசைத்து தொடக்கி வைத்தாா். மாரத்தான் ஓட்டப் போட்டி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
போட்டியில் முதல் பரிசை எஸ்.சுகுமாா், நிா்பயா வெற்றி வேல், 2-ஆவது பரிசை கே.அருண், டி.யாஷ்மிகா, 3-ஆவது பரிசை எம்.விக்னேஷ், சி.வினிதா ஆகியோருக்கு ஆட்சியா் மா.ஆா்த்தி வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை

தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாது; தேர்தல் நேரத்தில் மசோதா ஏன்? மக்களவையில் அமித் ஷா

அமைதிப்பேச்சு! கத்தார் மன்னரை நேரில் சந்தித்த பாக். பிரதமர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் பல்வகைப் படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


