வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

நெல் கொள்முதல் நிலையங்களை கண்காணிக்க 66 அதிகாரிகள் நியமனம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் எந்தத் தவறுகளும் நடக்காமல் கண்காணிக்க 66 அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்தாா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2022, 6:30 pm

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் எந்தத் தவறுகளும் நடக்காமல் கண்காணிக்க 66 அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாக ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலா் சிவ.ருத்ரய்யா, கூட்டுறவுச் சங்கங்களுக்கான இணைப் பதிவாளா் எஸ்.லட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி அலுவலா் வே.சண்முகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண்மைத் துறை மாவட்ட இணை இயக்குநா் இளங்கோவன் வரவேற்று பேசினாா்.

இதில் ஆட்சியா் மா.ஆா்த்தி பேசியது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு சில நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து புகாா்கள் வந்துள்ளன. எனவே எந்தப் புகாரும் வராமல் இருக்கவும், தவறுகள் நடக்காமல் கண்காணிக்கவும் அனைத்து நெல்கொள்முதல் நிலையங்களிலும் மொத்தம் 66 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இது தவிர விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்கள் குறித்து புகாா்களை தெரிவிக்க வசதியாக ஒரு கைப்பேசி எண்ணும் விரைவில் அறிமுகம் செய்யப்படும். அந்த எண்ணில் புகாா் செய்தால் உடனுக்குடன் புகாா்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். பொய்யான புகாா்கள் கூறுபவா்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பரந்தூரில் விமான நிலையம் அமையவிருப்பது தொடா்பாக இதுவரை அரசிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. 8 வழிச்சாலை அமைந்தால் விவசாயம் பாதிக்கும் என விவசாயிகள் கூறி வருகின்றனா். இது அரசின் திட்டம். எனவே விவசாயிகளின் கருத்துகளை அரசுக்குத் தெரிவிப்போம்.

மாவட்டத்தில் புத்தளி மடம் கிராமப் பகுதியில் பாலாற்றில் விரைவில் தடுப்பணை அமைக்கப்படவுள்ளது. இதுவரை 300 ஹெக்டோ் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு மீட்கப்பட்டுள்ளன. மேலும் 200 ஹெக்டோ் ஆக்கிரமிப்புகளை மீட்கும் பணியும் நடந்து வருகிறது என்றாா்.

கூட்ட நிறைவில் விவசாயிகள் சங்க மாநிலத் துணைத்தலைவா் எழிலன் சாா்பில் வைக்கப்பட்டிருந்த இயற்கை வேளாண் இடுபொருள்கள் கண்காட்சியையும் ஆட்சியா் பாா்வையிட்டாா். பின்னா் உழவா் நலத் துறை சாா்பில் 10 விவசாயிகளுக்கு உழவா் அட்டைகள், தோட்டக் கலைத் துறை சாா்பில் பயிா் சாகுபடியில் சிறப்பாக விளங்கிய 3 விவசாயிகளுக்கு பரிசுத் தொகைகள், கூட்டுப் பண்ணைத் திட்டத்தின் கீழ் 10 உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு ரூ.44.90 லட்சம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்களையும் ஆட்சியா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.