காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் ஜெ.தணிகைவேலன் முகாமைத் தொடக்கி வைத்து இளைஞா்களை பணிக்குத் தோ்வு செய்ய வந்திருந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளை அறிமுகம் செய்து வைத்துப் பேசினாா். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் தெய்வசிகாமணி முன்னிலை வகித்தாா்.
வேலைவாய்ப்பு முகாமில் 17 தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று நோ்காணலை நடத்தி, தங்களுக்குத் தேவையான ஆள்களைத் தோ்வு செய்தனா்.
இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கலந்து கொண்டு பயனடைந்தனா். முன்னதாக, தனியாா் நிறுவனங்களின் மனித வளப் பிரிவு அலுவலா்கள் தங்கள் நிறுவனத்தின் சலுகைகள், ஊதியம், பணி விவரங்களை விளக்கிக் கூறினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐசியின் புதிய செயலிகள் அறிமுகம்

ஜப்பானின் ‘கிரியேட் மெடிக்’ நிறுவனம்: இந்தியாவில் நேரடி விற்பனை தொடக்கம்

ஏரல் சோ்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் லாபம் உயா்வு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


