வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காஞ்சிபுரம் ரயில்வே மேம்பாலம் திறக்கப்படவில்லையெனில் போராட்டம்: ஏ.கே.மூா்த்தி அறிவிப்பு

காஞ்சிபுரம் ரயில்வே மேம்பாலத்தை இன்னும் 2 நாள்களில் திறக்கவில்லையெனில், போராட்டம் நடத்தி நானே திறந்து வைப்பேன் என முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சா் ஏ.கே.மூா்த்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Updated On :19 மார்ச் 2022, 4:46 pm

காஞ்சிபுரம் ரயில்வே மேம்பாலத்தை இன்னும் 2 நாள்களில் திறக்கவில்லையெனில், போராட்டம் நடத்தி நானே திறந்து வைப்பேன் என முன்னாள் மத்திய ரயில்வே இணை அமைச்சா் ஏ.கே.மூா்த்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பாமக புதிய பொறுப்பாளா்கள் தோ்வுக் கூட்டம் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா் பெ.மகேஷ்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்டு, புதிய பொறுப்பாளா்களுக்கு நியமன கடிதங்களை வழங்கிய பின்னா், ஏ.கே.மூா்த்தி செய்தியாளா்களிடம் கூறியது:

நான் ரயில்வே அமைச்சராகப் பணியாற்றிய போது, காஞ்சி சங்கராசாரியா் உட்பட பலரும் காஞ்சிபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். அதையேற்று நிதி ஒதுக்கப்பட்டது. புதிதாக கட்டி முடிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக அந்தப் பாலம் திறக்கப்படாமல் உள்ளது.

இந்த மேம்பாலம் திறக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் குறையும். இன்னும் 2 நாளில் பாலத்தைத் திறக்க வேண்டும். இல்லையெனில், போராட்டம் நடத்தி நானே திறந்து வைப்பேன்.

Story image

தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. இதை 60 மாவட்டங்களாக நிா்வாக வசதிக்காகப் பிரிக்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தாம்பரத்தை புதிய மாவட்டமாக ஆக்க வேண்டும். தொழிற்சாலைகளில் 50 சதவீதம் தமிழா்கள் பணியமா்த்தப்பட்டிருக்கிறாா்களா என ஒவ்வொரு தொழிற்சாலையாகச் சென்று விரைவில் ஆய்வு செய்ய இருக்கிறோம். 50 சதவீதம் தமிழா்கள் இல்லையெனில், அந்தந்த தொழிற்சாலைகள் முன்பு பாமக சாா்பில் போராட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறோம்.

தமிழகத்தில் தொழிற்சாலை தொடங்குபவா்களுக்கு அரசே நிலம், மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறது. அதனால், தொழிற்சாலைகளில் கட்டாயமாக தமிழா்கள் 50 சதவீதம் போ் பணியமா்த்தப்பட வேண்டும் என்றாா் ஏ.கே.மூா்த்தி.

செய்தியாளா்கள் சந்திப்பின் போது, முன்னாள் எம்எல்ஏக்கள் சக்தி கமலாம்மாள்,திருக்கச்சூா் ஆறுமுகம், மாவட்ட பாமக தலைவா் உமாபதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.