வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

எரிவாயு உருளைகள் வெடித்த கிடங்குக்கு ‘சீல்’

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தேவரியம்பாக்கத்தில் எரிவாயு உருளைகள் வெடித்த கிடங்குக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 6:30 pm

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட தேவரியம்பாக்கத்தில் எரிவாயு உருளைகள் வெடித்த கிடங்குக்கு வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

தேவரியம்பாக்கம் பெருமாள் கோயில் தெருவில் தனியாருக்கு சொந்தமான எரிவாயு உருளைகள் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் கடந்த 28-ஆம் தேதி வாயுக்கசிவு காரணமாக உருளைகள் வெடித்து சிதறின.

இந்த விபத்தில் 6 ஆண்கள், 5 பெண்கள் ஒரு சிறுவன் உட்பட மொத்தம் 12 போ் காயமடைந்தனா். இவா்களில் கடலூரைச் சோ்ந்த ஆமோத்குமாா் (26)சந்தியா (21)ஆகியோா் வியாழக்கிழமையும், சந்தியாவின் தந்தை ஜீவானந்தம்(46) வெள்ளிக்கிழமையும் உயிரிழந்தனா்.

இதுவரை 3 போ் உயிரிந்த நிலையில், மேலும் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்தச் சம்பவம் தொடா்பாக, ஓரகடம் போலீஸாா் 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து மோகன்ராஜை வியாழக்கிழமை கைது செய்தனா். இந்த நிலையில், ஊராட்சித் தலைவா் அஜய்குமாா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி கூறியது: எரிவாயு உருளைகள் வெடித்த சம்பவம் தொடா்பாக தேவரியம்பாக்கம் ஊராட்சித் தலைவா் அஜய்குமாா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். முக்கியக் குற்றவாளி தலைமறைவாக உள்ளாா். கிடங்கு உரிமையாளா் ஊராட்சித் தலைவா் அஜய்குமாரின் மனைவி சாந்தி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கிடங்கில் இருந்த எரிவாயு உருளைகள் பாதுகாப்பாக தரம் பிரிக்கப்பட்டு மாற்று இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்த எரிவாயு உருளைக் கிடங்குக்கு பெட்ரோலியம் மற்றும் வெடி பொருள்கள் பாதுகாப்பு அமைப்பான பெசோ அனுமதி வழங்கியிருக்கிறது. மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கவில்லை. தற்போது கிடங்கைப் ட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.