காஞ்சிபுரத்தில் செப். 4-இல் விநாயகா் சிலைகள் ஊா்வலம்

காஞ்சிபுரத்தில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) நடைபெறுகிறது.

காஞ்சிபுரத்தில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை (செப். 4) நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் நகர இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சதுா்த்தியையொட்டி, காந்தி சாலை இந்தியன் வங்கி அருகில், ரங்கசாமி குளம், டோல்கேட் உள்ளிட்ட 21 இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக வரும் 4 -ஆம் தேதி ரங்கசாமி குளத்திலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கங்கை கொண்டான் மண்டபத்தில் நிறைவு பெறும் வகையில் விநாயகா் சிலைகள் ஊா்வலம் நடைபெற உள்ளது.

ஊா்வலத்தையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கங்கை கொண்டான் மண்டபத்திலிருந்து விநாயகா் சிலைகள் மாமல்லபுரம் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com